சந்திரனில் அரிய கனிம வளம் உள்ளதா? என்பது பற்றி அறிய அதன் மேற்பரப்பை வெட்டி எடுத்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள இருப்பவர் ஒரு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர் ஆவார். இது பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் வெளியிட்டுள்ள செய்தி: சான் ஜோஸில் அமைந்துள்ள மூனெக்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் நவீன் ஜெயின். இவர் நாசாவின் அமெஸ் ஆராய்ச்சிப் பிரிவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரனில் உள்ள அரிய கனிம வளங்கள் பற்றி ஆராயத் திட்டமிட்டுள்ளார்.இதற்காக அவர் இயந்திர மனிதர்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி ஜெயின் கூறுகையில், 2013ம் ஆண்டில் இந்த இயந்திர மனிதர்களை நிலவில் இறக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.நிலவுக்கு அனுப்பப்படும் இந்த இயந்திர மனிதர்கள் 2016க்குள் நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து படக்காட்சிகளை பூமிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment