Pages

11 Jan 2012

வாழைப் பழங்களை உடைத்து கின்னஸ் சாதனை

பொதுவாக வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கலாம், வெட்டலாம், பிசையலாம். ஆனால் உடைக்கமுடியுமா? ஆம் வாழைப்பழத்தை கூட தன்னால் உடைக்க முடியும் என நிரூபித்து உலகசாதனை படைத்துள்ளார் ஒருவர். ஒரு நிடத்தில் அவரால் 70 வாழைப்பழங்கள் உடைக்கப்பட்டு இவரது சாதனை கின்னஸ் சாதனையாக பதியப்பட்டுள்ளது. இவரின் சாதனையை காணொளியில் காணுங்கள்.
வீடியோ

Panda கரடி சாணத்தில் விளைந்த டீத் தூள் ரூ.18 லட்சத்திற்கு விற்பனை

சீனாவில் பாண்டா கரடி சாணத்தில் விளையும் டீ தூள் 500 கிராம் விலை ரூ.18.5 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிகபட்ச விலை கொண்டதாக இந்த டீத்தூள் விளங்கும். சீனாவின் சிசுவான் மாகாணத்தை சேர்ந்த தொழில் முனைவோர் அன் யான்ஷி (41). முன்னாள் ஆசிரியரான அன் ஒரு கருத்தரங்கில் பங்கேற்றார். அதில் கரடி சாணத்தின் மகத்துவம் குறித்து பேசப்பட்டது.

இதையடுத்து தனது தேயிலை தோட்டத்திற்கு ரசாயன உரத்திற்கு பதில் பாண்டா கரடியின் சாணத்தை உரமாக இட்டார். அதற்காக கரடி பண்ணையில் இருந்து 11 டன் சாணத்தை வாங்கினார். மண்ணின் வளம் பேணும் சத்து மிக்க கரடி சாணம் மூலம் விளைவிக்கப்பட்ட டீத்தூள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கும். இந்த டீயை குடிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக உடல் எடை குறைப்புக்கும், கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து பாதுகாப்பளிக்கும். இதுபோன்ற காரணங்களால் அரை கிலோ பாண்டா டீ ரூ.18.5 லட்சத்துக்கு மேல் விற்கப்படும்.

பாண்டா டீக்கு அதிக போட்டி ஏற்படும் என்பதால் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளதாக அன் தெரிவித்தார். பாண்டா டீ குறித்த கருத்தை சிலர் ஏளனம் செய்ததுடன் அரை கிலோ டீ தூள் ரூ.1.6 லட்சத்துக்கு வேண்டுமெனில் விற்கப்படலாம் என்று தெரிவித்தனர். ஆனால் இதை சவாலாக ஏற்று கரடி சாணத்தில் தேயிலை விளைச்சலை மேம்படுத்த கடும் முயற்சியில் ஈடுபட்டதாக அன் யான்ஷி தெரிவித்தார்.



ஒரு கொசு வர்த்தி சுருள் 100 சிகரெட்டுக்களுக்கு சமம்: ஆய்வில் தகவல்!

ஒரு கொசு வர்த்தி சுருள் எரியும் போது வரும் புகை 100 சிகரெட்டுக்களுக்கு சமமான பாதிப்புக்களை உண்டு பண்ணும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் கொசுக்களை ஒழிப்பதற்கு இந்த கொசு வர்த்தி சுருள் அதிக அளவில் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் சுவாசக்குழாய்கள் மற்றும் நுரையீரல் போன்றன பெருமளவில் பாதிக்கப்படுவதாக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பாதிப்புக்களை பொதுமக்கள் அறியாமல் உள்ளனர். இந்த ஆய்வை மலேசியாவைச் சேர்ந்த இதய நோய் சிறப்பு நிபுணர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தகவல் ஆனது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fridge-ல் வைத்த அசைவ உணவா -சாப்பிடாதீங்க!

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே Fridge. சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது Fridge. பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள் என சகலத்தையும் Fridge உள்ளே வைத்து கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வாரக் கணக்கில் Fridge-ல் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக fridge-ல் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.

நீண்ட நாட்கள் fridge-ல் வைத்திருக்கும் மாமிசத்தில் bacteria உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால் இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறுநீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

விஷமாகும் உணவு

இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால் தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வாரக் கணக்கில் இறைச்சியை fridge-ல் வைத்து பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் fridge-ல் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால் ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!

எளிதில் நோய் தாக்கும்

அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின் புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை fridge-ல் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை. அதேபோல் நாட்கணக்கில் சமைத்து fridge-ல் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

பாம்பு பாம்பை சாப்பிடும் காணொளி

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுவார்கள் இங்கே பாம்பை கண்டு பாம்பே நடுங்குகிறது. பெரிய மலைப்பாம்பை ஒரு கருத்த கருணாக பெரிய பாம்பு பிடித்து விழுங்கும் அதிசய காணொளி நீங்களும் பாருங்கள்.