கம்ப்யூட்டர் பயன்பாட்டில் சில விஷயங்கள் நமக்கு எந்த நேரமும் பயனைத் தரும் வகையில் இருக்கும்.அவற்றில் ஒன்று mouse கொண்டு click செய்து text தேர்ந்தெடுப்பது. பல word processor, e-mail text editor, இணைய தளப் பக்கங்கள் ஆகியவற்றில் இந்த mouse click பயன்பாடு நமக்குக் கிடைக்கிறது.ஒரு குறிப்பிட்ட சொல் அல்லது வாக்கியத்தினை, பத்தியை அடிக்கோடிட, சாய்வெழுத்துக்களாக மாற்ற நாம் என்ன செய்கிறோம்? Text தேர்ந்தெடுக்க mouse cursor அல்லது ஷிப்ட் கீயுடன் அம்புக் குறி கீயினைப் பயன்படுத்தி அதனை highlight செய்திடுகிறோம்.இதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது ஒரு சொல் எனில், அதன் மீது எங்கேணும் mouse cursorக் கொண்டு சென்று இரு முறை click செய்திடுங்கள்.அந்தச் சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை click செய்திடுங்கள். அந்த பத்தி முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும். இனி நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட text எப்படி வேண்மானாலும் மாற்றிக் கொள்ளலாம்
12 Nov 2011
ஏடிஎம் இயந்திரத்தில் பாம்பு
ATMல் என்ன வரும்? பணம் வரும். இல்லாவிட்டால் பணம் இல்லை என்று வரும் மெசேஜை பார்த்து எரிச்சல் வரும். Spainல் உள்ள ATM Machineல் இருந்து பாம்பு வந்திருக்கிறது. ஸ்பெயினின் டியோ நகரத்தில் ஜா மாட்ரிட் வங்கி ATM க்கு நேற்று ஒருவர் பணம் எடுக்க வந்தார். தனது ATM கார்டை நுழைத்து கடவுச்சொல்லை அடித்து பண தொகையை type செய்தார். பணம் எடுக்க அவர் தயாராக இருந்தார். பணத்துடன் கூடவே வழுவழுவென்று ஏதோ தென்பட்டது. சுதாரித்த அவர் நோட்டுகளை சட்டென்று இழுத்துவிட்டார்.பாம்பு ஒன்று மெதுவாக வெளியே தலையை நீட்டியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தார் விரைந்து வந்த போலீஸ்காரர் ஒருவர் தனது லத்தியை லாவகமாக அதன் அருகே பிடித்தார். அதை பிடித்துக்கொண்டு ஏற தொடங்கியது பாம்பு. http://www.youtube.com/watch?v=ElJQJZtY8WI&feature=player_embedded . இதற்குள் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உள் பக்கத்தில் குச்சியை விட்டு குத்தி அதை வெளியே தள்ளினர்.ஒரு பெட்டியில் அடைத்து பாம்பு பண்ணைக்கு அதை பத்திரமாக அனுப்பி வைத்தனர். ATM Machineல் விஷமத்தனமாக யாராவது பாம்பை உள்ளே போட்டார்களா என்றும் விசாரணை நடக்கிறது.
பெண் குழந்தை பெற்றெடுத்த உலகின் மிகக் குள்ளமான பெண்
உலகிலே மிகச் சிறிய பெண்மணி இந்தியாவைச் சேர்ந்த காமாட்சி என்ற பெண். தனது 25வது வயதில் ஒரு பெண்பிள்ளைக்குத் தாயாகும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகின்றார். இந்தியாவில் சிறிய அளவிலான பெண்ணுக்கு குழந்தை பிறந்தது இதுவே முதல் தடவையாகும்.
காமாட்சிக்கு பிறந்த குழந்தை 3.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் அவ்வாறு குழந்தை கிடைப்பது 40000 க்கு ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைப் பிரசவமடைவதும் மிகவும் அரிது என வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காமாட்சிக்கு பிறந்த குழந்தை 3.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் அவ்வாறு குழந்தை கிடைப்பது 40000 க்கு ஒன்றாகக் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தைப் பிரசவமடைவதும் மிகவும் அரிது என வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் முதலையின் புகைப்படம்
விலங்குகள் அழிந்து வருகின்றன. அதனை பாதுகாப்பதற்க்காக பல அமைப்புகள் போராடி வருகின்றன. இது போன்ற வித்தியாசமான புகைப்படங்கள் விலங்குகளை மக்கள் ரசிப்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. பிரபல புகைப்படக்கலைஞர் டானியல் வயது 37 என்பவரால் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தின் இரவு நேரத்தில் முதலையின் கண்களில் ஏற்படும் பிரதிபலிப்பை மிகவும் அழகாக தனது புகைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது இந்தப் புகைப்படம் வனவிலங்கு விளிப்புணர்வு கூட்டத்தில் இடம்பெற்றுள்ளது.இதனை பலரும் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.
Subscribe to:
Posts (Atom)