Pages

25 Dec 2011

இங்கிலாந்தில் 15 குட்டிகளை ஈன்ற நாய்

இங்கிலாந்தில் உள்ள கார்மர்ண்டன் ஷயர் நகரை சேர்ந்தவர் சுல்லிவன். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்த நாய் மொத்தம் 15 குட்டிகள் ஈன்றுள்ளது.
இதில் 5 ஆண் குட்டிகள், 10 பெண் குட்டிகள். ஒரே நாய் 15 குட்டிகள் போட்டது அதிசயமாக கருதப்படுகிறது. இதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து சுல்லிவன் கூறியதாவது, நாய் வயிறு பெரிதாக இருந்ததால் 7 அல்லது 8 குட்டி போடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 15 குட்டி போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இத்தனை குட்டியையும் எங்களால் வளர்க்க முடியாது. 2 குட்டிகளை மட்டும் எங்களோடு வளர்க்க போகிறோம். மற்றவற்றை விற்று விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.





பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்!!

பப்பாளி பழத்தின் தாவரவியல் பெயர் காரிசிகா பாபாயா. இதன் கனிகள், விதைகள், இலைகள் என்று அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது.
பப்பாளி வயிற்றுக் கோளாறுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. பப்பாளிக் காயின் பால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.

தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது

பூமியை ஒத்திருக்கும் இரட்டைப்பிறவி கோளின் படங்களை வெளியிட்டது நாசா!


அண்மையில் பூமியை ஒத்த கோளொன்று கண்டுபிடிக்கப்பட்டமை பலருக்கும் தெரிந்திருக்கும். இது தோற்றத்தில் அச்சு அசலாக பூமியை ஒத்திருக்கிறது.
விசேடமாக தயாரிக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் சுமார் 600 ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்த இந்த கோள் தொடர்பான படங்களை நாசா வெளியிட்டது, இது Kepler-20f என அழைக்கப்படுகிறது. Kepler-20f இனது மேற்பரப்பு மனித வாழ்க்கைக்கு ஏற்றதா என்ற ஆய்வு இன்னமும் நடைபெற்று வருகிறது.

பரப்பளவில் பூமியை விட சற்று சிறியது. ஆனாலும் வெப்பநிலை பூமியை விட அதிகம், இதன் சுற்றல் காலமும் பூமியை ஒத்திருப்பது வானியலாளர்களுக்கு இதன் மேல் கொண்ட ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.