Pages

2 Jul 2012

கிராந்தி யாத்திரை - அண்ணா ஹசாரே குழுவினர்


அண்ணா  ஹசாரே குழுவினர் புதுடில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசி்ன் ஊழல்களை கண்டித்து நேற்று கிராந்தி யாத்திரையை துவக்கினர்.  இந்த யாத்திரை அரியானாவில் துவங்கியது. பிரசாந்த்பூசன், கிரண்‌பேடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால்ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

வரும் 25-ம் தேதி இவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதற்கு முன்னோடியாகவும் ஆதரவு கோரியும் கிராந்தியாத்திரை நடக்கிறது.

இருநாட்கள் நடக்கும் இந்த யாத்திரை அரியானாவின், சோனாபட், பகதூர்கார்க்,ரோட்டாக், மிஹம்,பிவானி, ஹிசார், சோனாபட் உள்ளிட்ட பெருநகரங்கள் வழியாக சென்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டங்களிளும் இவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

1 Jul 2012

அண்ணா 4 - புதிய வகை அரிசி அறிமுகம்

புதிய வகை அரிசி ஒன்றினை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்த அரிசியினை விளைவிப்பதற்கு வழக்கமாக உபயோகப்படுத்தும் தண்ணீரின் அளவை விட 75% குறைவாகத் தான் செலவாகும் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்ததாக தெரிவிக்கின்றனர்.  புதிய வகை அரிசிக்கு 'அண்ணா 4' என்று பெயரிட்டுள்ளனர்.

 புதிய வகை அரிசி பற்றி பேராசிரியர்.K.N. செல்வராஜ் அவர்கள் தெரிவிக்கையில் இந்த விதைநெல்களைப் பயன்படுத்தி மகசூல் செய்த உடன் இதனை வழக்கமான நெல்களைப் போல மீண்டும் பயன்படுத்த முடியும் என்று கூறினார்.  இந்த ஆராய்ச்சிக்கு ராக்பில்லர் என்னும் தொண்டு நிறுவனம் நிதி உதவி வழங்கியது.

 தற்போது கோடை மழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் நெல்களை பயிரிடாமல் உள்ளனர். இந்த வகையான விதைநெல்களை பயன்படுத்தும் போது கவலையில்லாமல் பயிரிடலாம்.  ஏனெனில் இந்த நாற்றுகளுக்கு தண்ணீரின் தேவை குறைவே.

அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் ஆணையர்கள் இந்தத் திட்டத்தை செயலுக்கு கொண்டு வருவது குறித்து கோயம்புத்தூரில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விவசாயிகள் இந்த விதை நெல்களைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சி அடைவார்கள். இது செயலுக்கு வரும் காலம் எப்போது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.