Pages

10 Feb 2012

COMPUTER பெயர் காரணம்



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம். நம் வாழ்க்கையில் இன்று கணினி என்பது ஒரு இன்றியமையாத ஒரு பொருள் போல ஆகிவிட்டது.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER என்ற பெயர் வந்தது என்று தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research
COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

தங்கச் சங்கிலி உருவாகும் முறை (வீடியோ இணைப்பு)



நாளுக்கு நாள் நாம் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே வருகின்றது. ஆனாலும் நம்மில் அனேகருக்கு தங்கத்தின் மிதுள்ள ஆசை இன்னும் குறையவில்லை.
காரணம் அவை நமது பாரம்பரிய அணிகலன்களாக கருதப்படுகின்றது. தற்போது தங்கம் அணிகலனாக மட்டுமின்றி முதலீடு மற்றும் சேமிப்பு பொருளாகவும் பாவிக்கப்படுகின்றது.
அவ்வாறு நாம் விரும்பி பயன்படுத்தும் தங்கம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்கின்ற செய்முறையை இங்கு காணலாம்.

“காதலர் தினம்” சுவையான வரலாற்று கதைகள்..



உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான, தகவல்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர்தினக் கதைகள் தியாகம் நிறைந்தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம்.
வேலண்டைன்ஸ் டே
வேலண்டைன்ஸ் டே என்று உலகமெங்கும் கொண்டாடப்படும் காதலத் தினம் வேலண்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது நம்பிக்கை. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர்.
திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்யவேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வேலண்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வேலண்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14. வேலண்டைன்ஸ் டே குறித்து உலவும் கதைகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கதை இது.
சீனர்களின் காதலர் தினம்
சீனர்களின் காதலர் தின கதை சுவாரஸ்யமானது. சுவர்க்கத்தின் சக்கரவர்த்திக்கு ஏழு மகள்கள். ஏழாவது மகளான ஸி நூ அழகிகளுக்கெல்லாம் அழகி ! பேரழகி. ஒரு நாள் ஏழு சகோதரிகளும் நதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள். நுவூ எனும் இளைஞன் அவர்களைப் பார்த்தான். குறும்புத் தனமாக எல்லாருடைய ஆடைகளையும் எடுத்துப் போய்விட்டான். ஆடைகள் இல்லாமல் வெளியே வரமுடியாமல் சகோதரிகள் தவித்தனர். கடைசியில் தங்கள் கடைசித் தங்கையான ஸி நூ வை அவனிடம் சென்று ஆடை வாங்கி வர அனுப்பினார்கள். ஈரம் சொட்டச் சொட்ட எழிலுடன் வந்து நின்ற அவளைப் பார்த்தவுடன், நுவூ காதல் கொண்டான். இந்த காதல் திருமணத்தில் முடிந்தது. விஷயம் தெரிந்த மன்னர் இருவரையும் பிரித்து வானத்தின் இரண்டு மூலைகளில் கொண்டு போய் விட்டார். அவர்கள் ஏழாவது மாதத்தின், ஏழாவது நாளில் மட்டும் தான் சந்தித்துக் கொள்ள முடியும். அந்த நாள் தான் சீனர்களின் காதலர் தினம்.
நட்புக்கு மரியாதை
பின்லாந்து நாட்டில் வேலண்டைன்ஸ் டே சற்று வித்தியாசமானது. இது காதலர்களுக்கான தினம் அல்ல. இந்த நாளை அவர்கள் ‘ஸ்டேவான்பாபியா’ என்று அழைக்கின்றனர். அதாவது இதற்கு நண்பர்கள் தினம் என்று பொருள். நண்பர்களாய் இருப்பவர்கள் இந்த நாளை விமரிசையாக கொண்டாடுகின்றனர். நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும், பரிசுகள் கொடுப்பதும் என இந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர். எங்கெங்கோ இருக்கும் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக கூடி இந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடுவது சிறப்பம்சம்.


தானே' தானாக வந்ததல்ல... மியான்மர் தந்தது


டலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை ஆரம்பித்தவர்கள் ஆஸ்திரேலியர்கள்தான். இதுவும் சமீபத்தில் அல்ல, அரை நூற்றாண்டுக்கு முன்பே இந்த வழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்கள். 1950ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கத்தை சுவீகரித்துக் கொண்டது அமெரிக்கா.

ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன.

2004- முதல்....

கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்த் பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறி வைத்து தாக்கியது. இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்துதான் 'தானே' என்ற பெயர் தேர்வு செய்து சூட்டியுள்ளது.

இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் (பர்மா). மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களின் பெயர்கள்...

முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா)

11 நாட்களில் ‘அக்னிபாத்’ ரூ.100 கோடி வசூல்



நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த இந்தி திரைப்படம் ‘அக்னிபாத்’ வெளியான 11வது நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது. 7 நாளில் இந்த சாதனை செய்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பாலிவுட் நடிகர் ஹிருத்திக் நடிப்பில் வெளிவந்துள்ள ‘அக்னிபாத்’ திரைப்படம் நாடு முழுவதும் 2,000 முதல் 3,000 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே ரூ.25 கோடி வசூலை குவித்த அந்த படம் 11வது நாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. முதல் 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய 9வது படம் இது. ஏழே நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்து சல்மான்கானின் ‘பாடி கார்டு’ சாதனை செய்தது. அடுத்ததாக கஜினி (9 நாட்கள்), 3 இடியட்ஸ் (9 நாட்கள்), தபாங் (10 நாட்கள்), கோல்மால் 3 (14 நாட்கள்), ரெடி (15 நாட்கள்) என ரூ.100 கோடி வசூலை தொட்டுள்ளன. பிரின்ட்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, அதிக சிறப்பு காட்சி கள், சினிமா தியேட்டர்களின் அளவு, அதிக கட்டணம் ஆகியவற்றால் குறைந்த நாட்களில் அதிக வசூல் கிடைப்பதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.