Pages

30 Jan 2012

பிரகாசமான ஒளியுடன் பூமியின் வடமுனையை தாக்கிய சூரியப் புயல்


சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இது செயற்கைகோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், இதன் மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த தாக்குதல் அச்சம் அதிகம் இருந்தது.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர். இந்த காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் நேற்று முன் தினம் கரோனா பிளாஸ்மா கதிர்வீச்சு உருவாகி அன்றைய தினமே பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்காட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது.

அப்போது வானில் நீலம்-பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது. இதை விஞ்ஞானிகள் அதிநவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

முதன் முதலாக

உலகில் முதன் முதலாக அஞ்சல்தலை வெளியிட்ட நாடு இங்கிலாந்து.

உலகை முதன் முதலில் சுற்றி வந்த கப்பல் விக்டோரியா.

உலகில் முதன் முதலாக பத்திரிகைகளில் கார்ட்டூன் படங்களை வெளியிட்ட நாடு இத்தாலி.

உலகில் முத்ல் கண்வங்கியைத் தொடங்கிய நாடு அமெரிக்கா.

உலகில் முதன் முதலாக அஞ்சல்தலையில் கழுதை படத்தை வெளியிட்ட நாடு கென்யா.

உலகில் முதன் முதலாக 1403ல் சிறைச்சாலை ஏற்படுத்திய நாடு இங்கிலாந்து.

உலகின் முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை 1848 ல் தந்தை செர்ஹென்றிகோலி என்பவரால் உருவாக்கப்பட்டது.

உலகின் முதல் டெலிபோன் டைரக்டரி 1800 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிடப்பட்டது.

உலகின் முதன் முதலாக சங்கீதம் தொடர்பாக வெளிவந்த நூல் நயசாஸ்திரா.

உலகில் முத்ன் முதலாக பார்வையற்றவர்களுக்காக அல்சேசன் நாய்களை பழக்கிய நாடு ஜெர்மனி.

உலகில் முதன் முதலாக கைரேகையைப் பதிவு செய்யும் முறையைத் வழக்கத்தைத் தொடங்கியவர் ஹேர்ஷெல் எனும் ஆங்கிலேயர்.

உலகின் முதல் புத்தகமாக பைபில் 1455 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அச்சிடப்பட்டது.

உலகில் முதன் முதலாக தீக்குச்சிகள் 1844 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டன.

உலகின் முதல் கலங்கரை விளக்கம் அலெக்ஸாண்டிரியா வளைகுடாவில் கி.மு. 300 ஆம் ஆண்டில் டால்மி எனும் மன்னரால் எழுப்பப்பட்டது.

உலகின் முதல் வேலை நிறுத்தம் கிரேக்கத்தில் கி.மு.309 ஆம் ஆண்டில் நடத்தப் பெற்றது.

உலகில் முதன் முதலில் தேசியக் கொடியை 1218 ஆம் ஆண்டில் உருவாக்கிய நாடு டென்மார்க்.

உலகில் முதன் முதலில் தோன்றிய சங்கம் இங்கிலாந்திலுள்ள ராக்பேல் நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்தான்.

உலகில் முதன் முதலாக வாசனைத் தபால்தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

உலகில் முதன் முதலாக பிசப் ஆன பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பார்பரா சிஹரிஸ்.

உலகின் முதல் செய்தி நிறுவனம் 1825ல் பாரீசில் தொடங்கப்பட்டது.

உலகில் முதன் முதலாக மியூசியம் தொடங்கிய நாடு எகிப்து.

உலகின் முதல் கண் மருத்துவமனை 1818ல் லண்டனில் தொடங்கப்பட்டது

பசுமைப் பொங்கல்



பசுமைப் பொங்கல்...பல்வேறு அமைப்புகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், சென்னை கொளத்தூர் பள்ளி ஒன்றில் சற்று வித்தியாசமாக பசுமைப் பொங்கல் கொண்டாடப்பட்டது.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மரக்கன்றுகளுடன், பானை மற்றும் கரும்பு வடிவில் அமர்ந்து பொங்கலை வரவேற்றனர்.

மூளை பற்றி ஒரு தகவல்



மனிதனது மூளையில் ஏராளமான நுண்மடிப்புகள் உள்ளன. கட்டளை அல்லது செய்திகளைக் கிரகிக்கும் பகுதி மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சிலரது மூளை மடிப்புகள் மிகவும் அபாரமானவை. இவை கம்ப்யூட்டர்களைப் போல பணிபுரிவதுடன் அதி அற்புதமான கிரகிக்கும் ஆற்றலையும், நினைவாற்றலையும் கொண்டது. சிலர் இளமையிலேயே அதிபுத்திசாலிகளாக விளங்குவது இதனால்தான். சீரான ஒரு மூளையில் பல ஆயிரம் நுண்மடிப்புகள் உள்ளன என்கின்றனர் நரம்பியல் அறிஞர்கள்