Pages

14 Apr 2012

இயேசு கிறிஸ்துவின் கல்லறை


முதலாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த Jerusalem-ல் உள்ள இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1980ம் ஆண்டில் முதலாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கல்லறை Jerusalem-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதன் முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் கமெராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

செவ்வாயில் யானையா?


செவ்வாயில் யானை போன்ற ஒரு உருவம் உள்ளதாக செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சிவப்புக் கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய்க் கிரகத்தில் யானை போன்ற ஒரு உருவம் பாறை ஒன்றில் பதிவாகியுள்ளது.

செவ்வாயிலிருந்து செயற்கைக் கோள் மூலம் படம் பிடிக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்ட 22,000 படங்களில் இருந்து மேற்படி அதிசய படம் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. குறித்த படம் தொடர்பாக Arizona planetary பல்கலைக்கழகத்தின் புவியியலாளரான Alfred McEwen கருத்துத் தெரிவிக்கையில்,
ஆயிரம் ஆயிரம் தசாப்தங்களுக்கு முன்னர் பூமியில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் எரிமலை போன்றவற்றால் தான் இப்படியான நிலை உருவானது. அங்கு எரிமலைக் குழம்பு இருப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வுகளும் காரணமாக இருக்கலாம்.
பூமியப் போன்ற ஒரு நிலை இருந்ததால் அங்கு யானைகள் இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.