Pages

14 Feb 2012

இவர் இப்படி

கலியாண சுந்தரம் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணிபுரிந்தார் .மாத மாதம் தாம் பெற்ற 20,000 ரூபாய் பணத்தையும் முழுமையாக (முப்பது லட்சம்) ரூபாயையும் ஏழை மக்களுக்கு செலவழித்தார். தன தேவைகளுக்கு உணவகத்தில் பணியாளராக வேலை செய்தார்.

உலகில் இதுவரை யாரும் செய்ததில்லை என்பதால், அமெரிக்காவில் 1000 ஆண்டுகளுகளில் சிறந்த மனிதர் (Man or Millinium) என்ற விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 30 கோடி பரிசாக பெற்றார். அதையும் முழுவதுமாக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வரலாறு படைத்தார் .

தன குடும்ப சொத்தின் மூலம் கிடைத்த 50 லட்சம் பணத்தையும்,5 வது ஊதிய குழுவில் மூலம் கிடைத்த விடுபட்ட ஊதிய தொகையான 10 லட்சத்தையும், அடுத்து வரபோகும் 5 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு எழுதி வைத்து விட்டார் .

ஏழைகளின் துயர் அறிய 7 ஆண்டுகள் நடைபாதை வாழ்கையை வாழ்ந்து வந்தார். திருமணம் செய்யாமல் ஓலை குடிசையில் கூலித் தொழிலாளிகள் உண்ணும் உணவையே உண்டு, தனது எளிமையான வாழ்கையை நடத்தி மக்கள் தொண்டாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment