மனிதன் கால்களை இழந்தால் அறுவைச்சிகிச்சை செய்து செயற்கை கால்கள் பொருத்துவது மருத்துவ உலகில் வழமையான ஒன்று. ஆனால் பிரித்தானியாவில் இரு கால்களையும் இழந்த பூனை ஒன்றுக்கு முதல் முறையாக செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு மருத்துவ உலகின் சாதனை படைத்துள்ளார்கள் மருத்துவர்கள். பிரித்தானியாவில் வாகன வித்து ஒன்றில் தனது இரு பின்னங்கால்களையும் இழந்த ஆஸ்கார் எனும் பூனைக்கே இவ்வாறு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் விலங்குகள் மருத்துவமனை ஒன்றின் பணிபுரியும் நரம்பியல்-எலும்பியல் கால்நடை மருத்துவரான Dr. Noel Fitzpatrick என்பவரின் முயற்சியே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளது. சுமார் 3மணி நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக இவருடன் சேர்ந்த மருத்துவர்கள் குழு பூனைக்கு செயற்கை கால்கள் பொருத்தி சாதித்துள்ளார்கள். பூனையும் எந்த வித தடங்களும் இன்றி அழகாக நடந்து செல்லுகிறது.
No comments:
Post a Comment